2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இந்தியாவுக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்களினால் இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மூயேன் அலி 67 ஓட்டங்களையும், ஜோ ரூட் 44 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜிங்கையா ரெஹானே 106 ஓட்டங்களையும், ஷிகார் தவான் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும் பெற்றனர். முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் 183 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். 
 
போட்டியின் நாயகனகா அஜிங்கையா ரெஹானே தெரிவு செய்யப்பட்டார். 
 
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் அடங்கிய தொடரில் 3 இற்கு 0 என இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டி எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .