A.P.Mathan / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தடைசெய்யப்பட்ட தலைவர் ஸ்ரீனிவாசனுக்கு தமது ஆதரவினை வழங்குவது என சபையின் 21 உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கபப்ட்டுள்ளது. இந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வருடாந்தப் பொதுக் கூட்டம் நடாத்தப்படவேண்டும். அத்துடன் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட வேண்டும். நீதிமன்றினால் தற்காலிக தடை செய்யப்பட்டுள்ள ஸ்ரீனிவாசனின் தடை நீக்கப்பட்ட பின்னரே வருடாந்தப் பொதுக் கூட்டம் நடாத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .