2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

விதானகேவுக்கு எச்சரிக்கை

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் கீத்ருவான் விதானகே இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான காலி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளின் இரவு முழுமையாக தங்குமிடத்தை விட்டு அனுமதி இன்றி வெளியே சென்ற குற்றம், நேற்று நடைபெற்ற ஒழுக்காற்று குழுவின் விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு தண்டனையாக குறித்த போட்டியின் ஊதியம் முழுவதும் தண்டமாக அறவிடப்பட்டுள்ள அதேவேளை, கடுமையாக அவர் எச்ச்சரிக்கப்பட்டு ஒரு வருட கண்காணிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் இவர் கடுமையாக தண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 
 
விதானகே, 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்குள் இது போன்ற அல்லது அணியின் சுமூக நிலைமைகளை குழப்பும் விதத்தில் நடந்து கொண்டால் உடனடியாக ஒரு வருட தடைக்கு உட்படுத்தப்படுவார். அவ்வாறே தீர்ப்பு வழங்கப்பட்டுளளது என இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். 
 
கீத்ருவான் விதானகே இதற்க்கு முதல் பங்களாதேஷில் வைத்தும், இங்கிலாந்து பயணத்தின் போதும் இவ்வாறு நடந்து கொண்டதாக இலங்கை அணியின் முகாமையாளர் ஏற்கெனவே அறிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. காலி இரவு சம்பவத்திற்கு மன்னிப்பு கோரி ஈ மெயில் மூலம் இலங்கை கிரிக்கெட்டிற்கு அனுப்பிய கடிதத்தில் தான் பௌத்த சமய வழிபாடான பிரீத் ஓதுதல் நிகழ்விற்கு சென்றதாக தெரிவித்து இருந்த போதும் விசாரணைகளை தொடர்ந்தும் அவர் எங்கே சென்றார் என்ற தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. 
 
குறித்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சில ஊடகங்கள் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் பெண் செயலாளர் ஒருவருடன் விதானகே பாலியல் உறவுக்காக வெளியில் சென்று இருக்கலாம் எனவும் சிரேஷ்ட வீரர்கள் இது தொடர்பாக  விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .