2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இந்தியா பிரீமியர் லீக் தொடரில் ரொஜர் பெடரர்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சர்வதேச பிரீமியர் டென்னிஸ் போட்டித் தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் விளையாடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரபால் நடால் இந்த தொடரில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டு இருந்த போதும் அவரின் உடல் உபாதை காரணமாக விலகிக்கொண்டார். இதனைத் தொடர்ந்தே ரொஜர் பெடரர் இந்த தொடரில் இணைந்துள்ளார்.
 
தான் இந்தியாவில் விளையாட ஆசைப்படுவதாகவும், தனக்கு இந்தியாவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தன்னை விரும்புகின்றார்கள் என்பதையும் அறிந்துள்ளதாகவும் ரொஜர் பெடரர் கூறியுள்ளார். எனவே இந்த தொடரின் போது உங்கள் அனைவரையும் டிசெம்பர் மாதம் அங்கே சந்திக்கின்றேன் என பதிவு செய்து அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்துள்ளார். 
 
4 அணிகள் பங்கு பற்றும் இந்த தொடரில் அமெரிக்காவின் முன்னாள் டென்னிஸ் வீரர் பீட் சாம்ராஸ் உடன் இணைந்து விளையாடவுள்ளார். இந்த தொடர் நவம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி வரை இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .