2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பந்துவீச லசித் மாலிங்க ஆரம்பித்துவிட்டார்

A.P.Mathan   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் பந்து வீச ஆரம்பித்துள்ளார். காலில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட லசித் மாலிங்க கடந்த 4 மாதங்களாக பந்துவீசவில்லை. இந்த நிலையில் அவருடைய உபாதை குணமடைந்துள்ள நிலையில் மீண்டும் பந்துவீச ஆரம்பித்துள்ளார். 

24ஆம் திகதி முதல் அவர் பந்துவீச ஆரம்பித்துள்ளார். முதல் நாளில் 30 பந்துகளை அவர் வீசியுள்ளார். அதன் போது எந்த சிரமங்களையும் அவர் எதிர்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக அவர் பந்துவீச்சை அதிகரித்து முழுமையாக தயாராகிவிடுவார் என இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக் குழுத்தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .