George / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களை குவித்துள்ளது.
பங்களாதேஷூக்கு எதிராக மெல்போர்னில் தற்போது நடைபெற்றுவரும் போட்டியிலேயே இலங்கை அணி 332 ஓட்டங்களை குவித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
136 பந்துகளுக்கு முகங்கொடுத்து அதிரடியாக ஆடிய தில்ஷான், 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களை விளாசினார்.
குமார் சங்கக்காரவும் தனது பங்குக்கு 76 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
போட்டியில் வெற்றி பெற பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை பெறவேண்டும்
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago