Editorial / 2017 ஓகஸ்ட் 28 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் 2ஆம் நாள் முடிவில், பங்களாதேஷ் அணி, தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து 18 ஓட்டங்களுடன், 2ஆவது நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், பின்வரிசை வீரர்களின் பொறுப்பான விளையாட்டால், அவ்வணி, ஓரளவு போட்டித்தன்மையான ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மற் றென்ஷோ 45, அஸ்டன் ஏகர் ஆட்டமிழக்காமல் 41, பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப் 33, பற் கமின்ஸ் 25, கிளென் மக்ஸ்வெல் 23 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், தனது 16ஆவது 5 விக்கெட் பெறுதியைப் பதிவுசெய்த ஷகிப் அல் ஹஸன், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், டெஸ்ட் விளையாடும் ஏனைய 9 நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட் பெறுதிகளைக் கைப்பற்றிய 4ஆவது வீரர் என்ற பெருமையை, அவர் பெற்றார்.
தவிர, மெஹெடி ஹஸன் மிராஸ், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முதலாவது இனிங்ஸில் 260 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி பெற்றிருந்த நிலையில், 43 ஓட்டங்களால் முன்னிலை வகித்துக் காணப்பட்டு, 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது.
நேற்றைய நாள் முடிவில் அவ்வணி, ஒரு விக்கெட்டை இழந்து 45 ஓட்டங்களுடன் காணப்படுகிறது. இதன்படி, 88 ஓட்டங்களால் அவ்வணி முன்னிலை வகிக்கிறது.
துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால், ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களுடன் காணப்படுகிறார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை, அஸ்டன் ஏகர் கைப்பற்றினார்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago