Kamal / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியொன்றில் அடுத்தடுத்த 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை டீ - 20 அணியிண் தலைவர் லசித் மாலிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (06) கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது டீ - 20 போட்டியின் போது நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நால்வரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்தே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன், நியூசிலாந்து அணியின், கொலின் முன்ட்ரோவை ஆட்டமிழக்ச் செய்ததன் மூலம் டீ -20 போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை (100) வீழ்த்தியுள்ள வீரர் என்ற இலக்கையும் மாலிங்க அடைந்துள்ளார்.
இதற்கு முன்னர் இவர் ஒருநாள் போட்டியொன்றில் தென்னாபிரிக்க வீரர்கள் நால்வரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்மிழக்கச் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
20 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago