Shanmugan Murugavel / 2025 நவம்பர் 09 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண, கல்முனை கல்வி வலயத்தில் முதன்முதலாக பாடசாலை றக்பி அணி சாஹிரா தேசிய பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஸாஹிரா ரக்பி அணியின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் றக்பி அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப்பின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இந்த சாஹிரா றக்பி அணியினருக்கு மூன்று மாதங்களுக்கு மேலாக றக்பி அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப், தேசிய போட்டிகளில் விளையாடிய வீரரும், பயிற்றுவிப்பாளர் பயிற்சிகளை பெற்றவருமான றக்பி பயிற்றுவிப்பாளர் ஏ.பி.எம். இல்ஹாம் ஆகியோர் தொடர் பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .