Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், செல்சிக்குமிடையிலான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, கிரனிட் ஸாகா, புகயோ ஸாகா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை தம்மி ஏப்ரஹாம் பெற்றார்.
இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
யுனைட்டெட் சார்பாக, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், புரூனோ பெர்ணாண்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லெய்செஸ்டர் சார்பாக, ஹார்வி பார்ன்ஸ் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
32 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago