2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தனிமைப்படுத்தலில் ரோஹித், பண்ட், கில், சைனி, ஷா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 02 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் உப அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, விக்கெட் காப்பாளர் றிஷப் பண்ட், ஆரம்பத்துடுப்பாட்டவீரர்கள் ஷுப்மன் கில், பிறித்திவி ஷா, வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மெல்பேணிலுள்ள உள்ளக உணவகமொன்றில் இவர்கள் உணவருந்தும் காணொளியொன்று டுவிட்டரில் பிரசுரிக்கப்பட்டதையடுத்தே முற்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சி பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளபோதும் ஏனைய குழாமிலிருந்து தனித்தே இவர்கள் பயிற்சி  பெற முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X