Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவர், வரும் ஞாயிறன்று (ஒக். 4) தெரிவுசெய்யப்படவுள்ளார். மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பொதுக் கூட்டத்திலேயே அவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா, திடீரென மரணமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட இடைவெளிக்கே, புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.
புதிய தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவரான ஷாங் மனோகர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆளுங்கட்சியும் பல கிரிக்கெட் சபைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருப்பதுமான பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவு, மனோகருக்குக் கிடைத்திருப்பதன் காரணமாகவே, அவர் எதிர்ப்புகளின்றித் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .