Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பயேர் லெவர்குசனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றது.
பயேர்ண் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும், ஆண்டின் சிறந்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன வீரரான றொபேர் லெவன்டோஸ்கி பெற்றிருந்தார். லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிக் ஸ்சிச் பெற்றிருந்தார்.
இதேவேளை, ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், எஃப்.சி கொலோனுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago