2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் ஹலெப், ஸ்விட்டோலினா, செரீனா

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா, உலகின் 10ஆம்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் சீனாவின் ஸாங்க் ஷுவாயை எதிர்கொண்ட றோமானியாவின் சிமோனா ஹலெப், 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், தனது காலிறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா முஷோவாவை எதிர்கொண்ட உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில் சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான அலிஸன் றிஸ்கேயை எதிர்கொண்ட செரீனா வில்லியம்ஸ், 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், பிறிதொரு காலிறிதிப் போட்டியில் பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டாவை எதிர்கொண்ட செக் குடியரசின் பார்பொரா ஸ்ரைக்கோவா 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .