2025 மே 05, திங்கட்கிழமை

இராணுவ வாகனம் மோதி 3 சிறுவர்கள் காயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.ருத்திரன்

ஏறாவூர், கிரான் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இராணுவ வாகன மோதியதில் மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு குடிநீர் விநியோகிக்கும் பவுஸரில் மோதுண்டே இந்த சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி பவுஸர் வீதியால் சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக பாய்ந்து வந்து வீதியைக் கடக்க முற்பட்டுள்ளனர். இதன்போது இந்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சின்னக் கண்ணன், 12 வயதான ஜனிதன் மற்றும் 11 வயதான கௌஸல்யன் ஆகியோரே காயமடைந்து சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X