2025 மே 01, வியாழக்கிழமை

30 குடும்பங்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 15 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 30 குடும்பங்களுக்கான நிதி உதவியை காத்தான்குடி அஸ்ஸுப்பான் நலன்புரிச் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (14) வழங்கியது.

இதன்போது தங்களது வீடுகளின் குறை வேலைகளை பூர்த்தி செய்வதற்காக தலா 15,000 ரூபா படி 20 குடும்பங்களுக்கும்  மலசலகூடங்களை அமைப்பதற்காக தலா 10,000 ரூபா படி 05 குடும்பங்களுக்கும்  வாழ்வாதார உதவியாக தலா 10,000 ரூபா படி 03 குடும்பங்களுக்கும கிணறுகளை வெட்டுவதற்காக  தலா 10,000 ரூபா படி 02 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி அஸ்ஸுப்பான் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் தவிசாளர் மௌலவி ஏ.ஜே.அப்தூர் ரவூப் மிஸ்பாஹி,  தலைவர் சட்டத்தரணி எம்.ஐ.எம்.அஜ்மீர் ஹாஜா நவாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .