2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போரதீவுப்பற்றில் 80 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரசேத்தில் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு நேற்று புதன்கிழமை (13) முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதற்காக 80 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டன. 

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில்  அப்பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயனாளிகள் தெரிவில்  மனுக்குலத்துக்கான வீடமைப்பு நிறுவனத்தின் அதிகாரிகள்,  பிரதேச செயலக அதிகாரிகள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

போரதீவுப்பற்று பிரசேத்திலிருந்து இடம்பெயர்ந்து  வன்னியிலும்  இந்தியாவிலும் தங்கியிருந்தவர்கள்,  போரதீவுப்பற்று பிரதேத்தில் மீளக்குடியமந்துள்ளனர். இவர்களிடமிருந்து 125 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 

ஆனால், 80 இந்திய வீடுகளுக்கான அனுமதியே கிடைத்துள்ளதாகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.
இந்த நிலையில்,  இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதற்கு தகுதியுடையவர்களின் விண்ணப்பங்களை  அதிகாரிகள்  பரிசீலனை செய்து பயனாளிகளைத் தெரிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X