Suganthini Ratnam / 2016 ஜூலை 10 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வீசிய கடும் காற்றுக் காரணமாக வீட்டுக் கூரை உடைந்து விழுந்ததில் அன்வர் ரப்சானி (வயது 13) என்ற சிறுமி படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற இரண்டாவது மாடிச்; சுவர், அருகில் உள்ள வீட்டுக் கூரையின் மீது விழுந்தது. இந்நிலையில், அவ்வீட்டுக் கூரை உடைந்து இச்சிறுமியின் மீது விழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago