Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வெள்ளத்தம்பி மகேஸ்வரன் (வயது 26) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இவரது மனைவியான மகேஸ்வரன் சிந்து (வயது 26) நஞ்சு அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கிராமத்திலுள்ள வீடொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொத்தியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணம் முடித்து ஒரு வருடமாவதுடன், நொச்சிமுனைக் கிராமத்தில் வாடகை வீட்டில் இவர்கள் இருந்துவந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் இல்லையென்பதுடன், இவர்கள் இருவருக்குமிடையில் அவ்வப்போது தகராறு இடம்பெற்று வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்களின் வீட்டில் அவ்வப்போது சண்டை பிடிக்கும் சத்தம் கேட்பதுடன், வழமைபோன்று புதன்கிழமை இரவும் சண்டையிடும் சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago