Suganthini Ratnam / 2016 நவம்பர் 07 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 02 பேரை ஞாயிற்றுக்கிழமை (06) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி பிரிவிலுள்ள தமது மதுபானச்சாலைக்கு மதுபானப்; கொள்வனவுக்காக 03 பேர் முச்சக்கரவண்டியில் வந்தனர். அவர்களில் இச்சந்தேக நபர்கள் இருவரும் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை தந்து மதுபானத்தைக் கொள்வனவு செய்ய முற்பட்டுள்ளனர்.
இவர்கள் வழங்கிய நாணயத்தாள் தொடர்பில் தமக்குச் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அதைச் சோதித்ததாகவும் இதன்போது, அந்நாணயத்தாள் போலியானது எனத் தெரியவந்தது. இந்நிலையில், இவர்களை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த மதுபானச்சாலை உரிமையாளர் கூறினார்.
இவ்வேளையில் முச்சக்கரவண்டியில் இருந்தவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
7 minute ago
9 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
17 minute ago