Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் காட்டு யானை தாக்கி காயமடைந்த சிறுமி ஒருவருக்கு நேற்று வியாழக்கிழமை பத்தாயிரம் ரூபாய் பராமரிப்புக்கான உதவிக் கொடுப்பனவுக் காசோலை வழங்கப்பட்டுள்ளதாக சர்வோதய நிறுவனத்தின் சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி தெரிவித்தார்.
கடந்த 03.09.2016 அன்று மட்டக்களப்பு மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் ஷர்மிலா (வயது 11) அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர் சைக்கிளில் ஈரலக்குளம் கிராமத்திற்குச் சென்றுவிட்டு சந்தனமடு ஆற்றுப்பகுதி அருகே உள்ள வயல்பாதையூடாக மாவடிவேம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும்போது காட்டுப்பகுதியிலிருந்து வந்த யானை இவர்களை வழிமறித்துத் தாக்கியதில் ரவீந்திரன் ஷர்மிலா உயிரிழந்திருந்தார்;.
இச்சம்பவத்தின்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) சுகமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் அவரது மேலதிக பராமரிப்புக்கான உதவிக் கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago