2025 மே 01, வியாழக்கிழமை

14 மாடுகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 08 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எஸ்.ரவீந்திரன்


மிருக பாதுகாப்புச் சட்டத்தை மீறி திருகோணமலையிலிருந்து கல்முனைக்கு லொறியொன்றில் 14 எருமை மாடுகளை அடைத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படும் லொறியின் சாரதியையும் நடத்துநரையும் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதுடன்,  மேற்படி மாடுகளையும் மீட்டுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.

லொறியில் அதிகளவான எருமை மாடுகளை அடைத்துக்கொண்டு சென்றதன் காரணமாக சில மாடுகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் இருவரும் வெலிசறைப் பிரதேசத்தைச்  சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு 14 மாடுகளை லொறியொன்றில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்டமையானது, மிருகங்களை பாதுகாப்பாக கொண்டுசெல்லும் சட்டத்தை மீறியுள்ளது. இதன் காரணமாக மிருகவதைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.  லொறி மற்றும் எருமை மாடுகளை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று வைத்துள்ளனர்.

சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .