2026 மே 06, புதன்கிழமை

புனரமைப்பு செய்யப்படாத நிலையில் பாலையடி கூட்டுறவு சங்க கட்டிடம்

Kogilavani   / 2012 மார்ச் 19 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடம் கடந்த யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பாழடைந்த கட்டிடத்தினுள் புற்கள் காடுகளைபோன்று வளர்ந்து காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இப்பகுதிக்குரிய கூட்டுறவு சங்க கட்டிடமானது தனியார் வீடுகளில் மாறி மாறி இயங்கிவருவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது  தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .