2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகம் திறப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


திருகோணமலையில் இதுவரை காலமும் இயங்கிவந்த கிழக்கு மாகாண நீர்பாபாசனப் பணிப்பாளர் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டார். அத்துடன் மாகாண அமைச்சர்களான உம்.எஸ்.உதுமாலெவ்வை, ரி.நவரெட்ணராஜா, எம்.சுபைர் ஆகியோரும், மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் கிருஸ்ணானந்தராஜா, பி.பிரசாந்தன், கே.எல்.எம். பரீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாகாகண நீர்ப்பாசனப்பணிப்பாளர் பொறியியலாளர் திலகரெட்டணம் தலைமையில் நடைபெற்ற இவ் திறப்பு விழாவில், நீர்ப்பானசத் திணைக்களத்தின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் மத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இருக்கிறது என்ற வகையில் மாகாண சபை  சார் அலுவலகங்களை மட்டக்களப்புக்கு மாற்றுவதற்கான ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • sivanathan Tuesday, 05 June 2012 11:49 AM

    மாகாண அமைச்சுக்கள் இனி மெல்ல மெல்ல மட்டக்களப்பு நோக்கி நகரும். தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது நினைவுக்கு வருகிறது.

    Reply : 0       0

    Ramesh Tuesday, 05 June 2012 04:15 PM

    கிழக்கு மாகாணத்தின் மத்தி மட்டக்களப்பு. ஏன் மட்டக்களப்பில் இருந்தால் தமிழ் வாழாதா...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .