2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் சூழல் பாதுகாப்பு திட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தினூடாக சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீடித்து நிலைகக்ககூடிய கரையோர வலய முகாமைத்துவத்துடனான மீளமைப்புத்திட்டம் எனும் கருப்பொருளில் நேற்று மாலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் கே.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மாவட்ட கரையோரம் பேணல் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் கே.கோகுலதீபன்,  சூழல் அதிகாரி கே.தர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தில் ஏற்படும் கடலரிப்பு இயற்கை அனர்த்தங்களை திட்டமிட்ட அடிப்படையில் தடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. கடற்படை, விமானப்படை அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் உட்பலர் கலந்து கொண்டனர்.































































  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .