2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் பெண்களின் கலாசார உடைகளுக்கு அங்கீகாரமளிக்குமாறு வேண்டுகோள்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்விப்பயிலும்  முஸ்லிம் மாணவிகள் நீளமான காற்சட்டை அணிவதற்கும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் இஸ்லாமிய ஆடையை அணிவற்கும் கிழக்கு மாகாணசபை அங்கீகரித்து அனுமதியளிக்குமாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான வேண்டுகோள் கடிதமொன்றை அவர் முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் தற்போது சாதாரண சட்டையை மட்டுமே அணிந்து செல்கின்றனர்.

இது இஸ்லாமிய பார்வையில்; இஸ்லாமிய பெண்களுக்கான ஆடை ஒழுங்கில் பிழையானதாகும் என்பதுடன் மாணவிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

இதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் நீளமான காற்சட்டை அணிந்து பாடசாலைக்கு செல்வதற்கு கிழக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றி அதற்கான அங்கீகாரத்தையும் அனுமதியையும் வழங்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் தாதியர்கள் மற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களும் குட்டையான வெள்ளை சட்டை அணிந்தே தமது கடமைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இஸ்லாமிய மார்க்க ரீதியான ஆடை ஓழுங்கு மீறப்படுகின்றது.

ஆகவே கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆடைகளை அணிவதற்கும் கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு அங்கீகாரத்தையும் அனுமதியையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தின் பிரதிகள் கிழக்க மாகாண சுகாதார,இளைஞர் விவகார, சிறுவர் பராமரிப்பு நன்நடத்தை அமைச்சா. எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண வுpவசாய அபிவிருத்தி கால்நடை, சுற்றுலாத்துறை  அமைச்சர், ஹாபீஸ் நசீர் அஹமட்,ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .