2026 மே 05, செவ்வாய்க்கிழமை

மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 25 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்புக்கும் கொழும்பக்கும் இடையிலான மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

மன்னம்பிட்டி மற்றும் கல்லல பிரதான வீதியில் எட்டு அடி வெள்ளம் பாய்வதால் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலருந்து கொழும்புக்கு செல்பவர்கள் வாகரை பனிச்சங்கேனி ஊடாகவும் கண்டி ஊடாகவும் உள்ள பாதைகைளை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து மன்னம்பிட்டி கல்லல பிரதான வீதிகளின் குறுக்காக வெள்ளம் பாய்கின்றது.

கடந்த வருடம் டிசம்பர் மாதமும், இவ்வருடத்தின் இம்மாதத்திலும் மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து நான்காவது தடவையாக தற்போது துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .