2026 மே 06, புதன்கிழமை

பிரபாகரன் பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளார்: ரணில்

Menaka Mookandi   / 2013 மார்ச் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்


'கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தடுத்தார். இதனால் அவர், பொதுமக்களுக்கு பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளார்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று சனிக்கிழமை பகல் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இது ஒரு முக்கியமான தருணம். இன்று நாம் மேற்கொள்கின்ற காரியங்கள் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மாற்றத்தைத் தீர்மானிக்கும். ஏனெனில் இந்த அரசு விருப்பத்தின் பேரில் தனது அதிகாரங்களைக் கைவிடாது. அதனை நாம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருக்கின்றோம். எனவே வன்முறையற்ற ஓர் ஐக்கிய ஒற்றுமையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்' என்றார்.

'நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. எல்லோரும் தவறு விட்டிருக்கின்றோம். நான் ஒன்று கூறினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் நான் அதைக் கூறியே ஆக வேண்டும். 2005ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வாக்களிக்கச் செல்ல விடாதமையினால் மக்களுக்கு பாரிய ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஏனைய இன மக்களுக்கும் சிக்கலான நிலையினையே ஏற்படுத்தியுள்ளார்' என்றார்.

'பிரபாகரனின் வாரிசுகளும் இன்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். பிரபாகரனை ஏற்றிச்செல்ல வந்த கப்பலுக்கும் என்னவாயிற்று? எல்லாக் கதைகளும் முடிந்து விட்டன. இப்போதாவது நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மற்றையது தற்போது இலங்கையின் பிரச்சனை அந்நிய பிரச்சினையாகிவிட்டது.

இதனால் அவர்கள் இன்னுமொரு தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  2009ம் ஆண்டு தீர்மானங்களை செய்ய வேண்டம் என்று ஊலகம் இன்று கேட்கிறது. அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றைய பெரிய கட்சி ஐ.தே.கட்சி தான் இந்த பின்னனியில் கொள்கைகள் பற்றிதான் நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றோம். எமது கொள்கைகள் கல்வி சம்மந்தமாகவும் அமைந்திருக்கின்றது. கொள்கைகள் வந்த பின் தான் நிறுவன மயமாக்கலை உருவாக்க வேண்டும் என்று நாம் காத்திருக்க முடியாது சமாந்தரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில் நாம் அனைத்து மாவட்டங்களையும் நோக்குகையில் மட்டக்களப்பு மாவட்டம் பின்னணியில் இருக்கின்றது. தென் மாகாணத்தில் பிரசாரத்தில் நாம் முன்னனியில் நிற்கின்றோம். திருகோணமலையில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்றோம் வடக்கிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.

மட்டக்களப்பை பொறுத்த வரையில் எந்த அமைப்புகளும் இல்லை ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெறுகின்றது. எமக்கு தேவை இங்கு ஒரு அமைப்பினை உருவாக்குவது. நாம் உருவாக்கலாம் நாம் தைரியமாகச் சொல்லாம.; ஐ.தே.கட்சிக்கு இது ஒரு நல்ல நேரம்.

இரண்டு விடயங்கள் உள்ளன. இதில், எவ்வாறு சிவில் சமுகம் மக்கள் படையணியில் சேர்ந்து கொள்வதென்பது மற்றையது யார் இவற்றில் முன்னணி வகிப்பது என்பது தமிழ் பிரதேசங்களில் யார் முன்னிலை வகிப்பது எனபதை த.தே.கூ தீர்மானிக்கும் முஸ்லீம் பிரதேசங்களைப் பிரதேசத்த பொறுத்தவரையில் வரையில் ஐ.தே.க தீர்மானிக்கும்.

ஐ.தே.கட்சியில் நிலைப்பாட்டை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதனை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அதனை தீர்மானித்து கொழும்பில் இருக்கும் எமது காரியாலயத்தில் வந்து தெரிவிக்கலாம்' என ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

மட்டக்களப்பு இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் செயலாளர் லவகுமார் மற்றம் பொருளாளர் செல்வகுமார் மற்றும் செல்வேந்திரன், சல்மா ஹம்ஸா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் கட்சியின் பொருளாளர் டி.பி.சுவாமிநாதன் மற்றும் ஹர்ஸ குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .