2026 மே 06, புதன்கிழமை

'மு.காவுக்கு நேரம் நெருங்கிவிட்டது'

Super User   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

நாடாளுமன்றத்திலும் கிழக்கு மாகாண சபையிலும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வழங்கியுள்ள ஆதரவினை உடனடியாக மீளப்பெற வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக மட்டக்களப்பு மாநகர சபையின்; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்.கே றம்ழான் தெரிவித்துள்ளார்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 7ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்த போதிலும். முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலோ கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியாது நிலை காணப்பட்டது. இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொடுத்த வாய்ப்பையும் மு.கா கைநழுவவிட்டுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண சபைக்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சரையும் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் முஸ்லிம் காங்கிரஸிற்கு முழுமையாக விட்டுக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் கிழக்கு மாகாண சபையில் இரு சிறுபான்மையினரும் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பல முறை அழைப்பு விடுத்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய இவ்வாறானதொரு வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிழக்கு முஸ்லிம்களுக்கோ முஸ்லிம் காங்கிரஸிற்கோ இனி ஒருபோதும் கிடைக்காத ஒரு அறிய வாய்ப்பாகும் அவ்வாறு ஆட்சியமைத்திருந்தால் மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்;.எம் அஷ்ரபின் கனவு நனவாகியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அது மாத்திரமின்றி கிழக்கில் மொழியால் ஒன்று பட்டு வாழ்ந்து வந்த இரு சமூகங்களுக்கிடையில் கடந்த பல வருட காலமாக காணப்பட்ட வேறுபாடுகள,; மனக்கசப்புக்கள,; காணிப்பிணக்குகள் போன்ற எத்தனையோ விடயங்களை தீர்த்;துக் கொள்ளக் கூடிய ஒரு அரிய வாய்பும் இருந்தது.

தலைமை சாவுமணியடித்தது


அதனையெல்லாம் முழுமையாக உதரித்தள்ளி விட்டு வாக்களித்த கிழக்கு முஸ்லிம்களினதும் முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளினதும் உணர்வுகளுக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளிக்காமல் இன்றைய கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்து மறைந்த மாபெரும் தலைவர் அவர்களின் கனவுக்கு கல்லறையமைத்ததுடன் கிழக்கு முஸ்லிம்களின்   விருப்பத்திற்கு சாவுமணியடித்து சரணாகதியாக்கியது எமது கட்சித்தலைமை.

கட்சித்தலைமையின் இச்சரணாகதி அரசியல் செயற்பாட்டினை கிழக்கு முஸ்லிம்கள் மாத்திரமின்றி ஏனைய பகுதி முஸ்லிம்களாளும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதனால் அதற்கெதிராக பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தோன்றின அதற்கு எமது கட்சித்தலைமை கட்சிதமாய் தனது செயற்பாட்டினை நியாப்படுத்தி நின்றது.

கிழக்கு மாகாணத்தில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்தால் மறுபுரத்தில் கிழக்கு வெளியில் குக்கிராமங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கும் அவர்களது குடியிருப்புக்களுக்கும், பள்ளிவாயல்களுக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் அதனை தடுத்து நிறுத்துவதற்காகவே அரசுடன் இணைந்து ஆட்சியமைத்ததாக தெரிவித்தார்கள்.

மத அடக்கு முறையை தடுத்து நிறுத்த முடியவில்லை


ஆனால் இன்று அரசிற்கு ஆதரவு வழங்கும்; கட்சிகளில் எந்தவொரு கட்சிக்கும் இல்லாத அரசியல் பலத்துடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பொரும்பான்மைக்கான ஆதரவினையும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவினையும் வழங்கியதனால்  மத்திய அரசில் இரண்டு முழு அமைச்சுப் பதவிகளையும் கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்று ஒரு பலமான முஸ்லிம் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்து விடப்பட்டிருக்கும் மத அடக்கு முறையை தடுத்து நிறுத்த முடியவில்லை.

மு.கா எதிர்கட்சியாக இருந்திருக்கலாம்


எதற்காக அரசுடன் கிழக்கு மாகாண சபையில் இணைந்து ஆட்சியமைத்தார்களோ அது நிறைவேற்றப்படவில்லை. எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ அது இன்று சுதந்திரமாக நடந்தேறுகின்றது. இவ்வாரான ஒரு சூழலில் இன்னும் அரசுடன் இணைந்து இருப்பது எந்த வகையிலும் பொறுத்தமற்றது.

ஆளும் தரப்புடன் இணைந்திருப்பது மாத்திரமின்றி இந்த நாட்டில் ஒரு முக்கிய அமைச்சுப் பதவியான நீதியமைச்சராக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளையும் அடக்கு முறையையும் தடுத்து நிறுத்த முடியாவிட்டால் எதற்கு இந்த முஸ்லிம் சமூகத்திற்கு நீதி அமைச்சுப் பதவி? நீதியே இல்லாத இந்த நாட்டில் நீதியமைச்சுப் பதவி வகிப்பதில் என்ன பயன்?  

முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பில் எதிர் கட்சியைப்போன்று இருப்பதை விட எதிர்கட்சியாக இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது இனத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதைப் போன்று ஏன் குரல் கொடுக்க முடியாது?

மக்கள் தந்த ஆணையை மக்களுக்காக ஏன் தியாகம் செய்ய முடியாது? இதுவரைகாலமும் அரசுடன் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது எதுவுமில்லை மாறாக இழந்ததே அதிகம் அதிகம் இன்னும் இழப்பதற்கு எமது உயிரைத் தவிர வேறு எதுவுமில்லை இறுதியாக இந்த முஸ்லிம் சமூகத்தின் உயிரையேனும் கட்சிக்கு வாக்களித்தற்காக காப்பாற்றுங்கள்.  

இன்னுமொரு புரம் இவ்வாரான செயற்பாட்டின் மூலம் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மீது பாரிய வெறுப்பேற்பட்டுள்ளது இன்னும் முஸ்லிம் காங்கிஸ் அரசுடன் இணைந்திருந்தால் முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடும் எதற்காக முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்படதோ அந்த நோர்க்கம் நிறைவேறாமல் போய்விடும் அதன் மூலம் வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்படும் பேரினவாதம் எதை சாதிக்க நினைத்ததோ அதை மிக இலகுவாக சாதித்து விடும் அபாயம் காத்திருக்கின்றது முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு திரைமறைவில் சதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை கட்சித் தலைமை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். 

எனவே எமது முஸ்லிம் சமூகத்தையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டிய இறுதி நேரமிது இத்தருனத்தை கட்சித் தலைமை மிகவும் சாதகமாக பயண்படுத்திக் கொண்டு அரசிற்கு வழங்கியுள்ள முழு ஆதரவினையும் மீளப்பெற்று எதிர் கட்சியாக நின்று முஸ்லிம் சமூகத்திற்காக போராடுவதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

பதவிகளுக்காக இல்லாமல்இன்னும் அரசுடன் இருந்து விட்டு இந்த நாட்டில் வாழும் 20 லட்சம் முஸ்லிம்களை ஆட்சியாளர்களுக்கும் பௌத்த தீவிரவாதிகளுக்கும்  அடிமைகளாக்கி விட்டு தேர்தல் காலத்தில் வெறும் வெற்றுக் கோஷங்களுடன் தேசத்திற்கு மகுடம், என்றும்  கமநெகும, என்றும் நெல்சிப், என்றும் மக்கள் முன் வந்து இனியும் மக்களை   ஏமாற்ற முடியாது. எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • vallarasu Monday, 08 April 2013 03:23 PM

    அக்கரைப்பற்று தவம் சொல்கிறார்... மு.கா, அர‌சாங்கத்துடன் இருப்பதால்தான் ஜனாதிபதியை சந்திக்க முடியுமாம். பொன்சேகா, ரணில், சம்பந்தன் எல்லோரும் ஜனாதிபதியை சந்திக்கவில்லையா? பாவம் அவரின் வாகனம் பறிபோகுமோ என்று பயம். உங்களுக்கு வாக்களித்த 32 ஆயிரம் மக்களுக்கு ஏதாவது செய்துள்ளீரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .