2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பிலும் காணிகள் சுவீகரிப்பு

Super User   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவம் மற்றும் கடற் படை ஆகியவற்றின் தேவைக்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கான 12 இடங்களில் காணிகளை சுவீகரிக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் ஆரம்பக்கட்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு மற்றும் காணி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகவும்  தெரியவருகிறது.

வாகரை, கிரான், வாழைச்சேனை, செங்கலடி மற்றம் பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தற்போது படையினர் நிலைகொண்டுள்ள இடங்களில் காணிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரியவருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .