2026 மே 06, புதன்கிழமை

மாணவியிடம் பாலியல் சேஷ்டை: நகரசபை உறுப்பினரின் முன்பிணை மனு நிராகரிப்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவியிடம் பாலியல் சேஷ்டை புரிந்த  காத்தான்குடி நகரசபை உறுப்பினரின் முன்பிணை மனுவை நிராகரித்த நீதவான் உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் மாஸ்டரின் சார்பில் சட்டத்தரணி எம்.ஐ.எம். றகீப் முன்வைத்த முன்பிணை கோரும் மனுவே நேற்று வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். அப்துல்லா முன்னிலையே இந்த முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், உறுப்பினர் அப்துல் லத்தீப் ஆகியோர் கல்முனைக்கு நேற்று சென்று சட்டத்தரணி எம்.ஐ.எம். றகீப் மூலமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.

அதனைப் பரிசீலித்த நீதிபதி அப்துல்லா முன் ஜாமீன் கோரிய மனுவை நிராகரித்ததுடன் சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து குறித்த நகர சபை உறுப்பினர் தலைமறைவாகியுள்ளார்.

இவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோரின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி மேடைப்பேச்சாளரும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இயங்கிவரும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களில் பொருளியல் பாடம் கற்பித்து வரும் ஆசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • aizaad Friday, 26 April 2013 03:37 AM

    இதையெல்லாம் எவரும் விமர்சனம் செய்வதில்லை . . . நல்ல சமூகமப்பா !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .