
-தேவ அச்சுதன்
சர்வதேச தாதியர் தினம் நேற்றாகும். இதனையொட்டி நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
தாய்க்கு பின்னர் அதிகமாக நேசிக்கப்படும் ஒருவராக தாதியுள்ளார். அதனை கௌரவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் தாதியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்களினால் தாதியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர் சிவசிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது சிறுவர்களுக்கான பல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டதுடன் வறுமை நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவோருக்கு ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் புற்றுநோய்க்குள்ளாகி சிகிச்சைபெற்றுவரும் நோயாளியின் குடும்பத்தினருக்கு வைத்திய அத்தியட்சர் சுகுணனின் ஆலோசனையின் கீழ் ஒரு தொகை பணம் தாதியர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.