2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சைக்கிள் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி நகரத்தில்  சைக்கிள் திருடியதாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்து விசாரணை செய்து வருவதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் இவரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

செங்கலடி பஸாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஒன்று  திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X