2025 மே 05, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும் அபராதம் விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா தீர்ப்பளித்தார்.

இச்சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோதே, அவர்  அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ஒவ்வொருவரையும் 10,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த 3 பேரையும்  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த அபாரதத் தொகையை இந்த மூவரும் செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X