2025 மே 05, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வந்த இரு முகவர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகில் ஆட்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படும் முகவர்கள் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒரு முகவரை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாழைச்சேனை, விநாயகபுரம் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மற்றுமொரு முகவரை நேற்று சனிக்கிழமை இரவு வாகரை, கதிரவெளியில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வாழைச்சேனை போன்ற இடங்களிலிருந்து சட்டவிரோதமாக படகில்  ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்தார் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவரை  கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X