2025 மே 05, திங்கட்கிழமை

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள பிரம்படித்தீவு பகுதியில் நேற்று சனிக்கிழமை இந்தச் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன், திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாகக்  கூறப்படும் 2 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபரை கைதுசெய்ய முடிந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவருக்கும் புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவருக்கும் சொந்தமான மோட்டார் சைக்கிள்களே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் திருட்டுப் போனமை தொடர்பில் ஏற்கெனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X