2025 மே 05, திங்கட்கிழமை

மான் இறைச்சி, கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், க.ருத்திரன்

மான் இறைச்சியையும் கட்டுத்துவக்கு ஒன்றையும் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இந்தச் சந்தேக நபரிடமிருந்து மான் இறைச்சியையும் கட்டுத்துவக்கையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலேயே இந்தச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சந்தேக நபரை அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட மான் இறைச்சி, கட்டுத்துவக்கு ஆகியவற்றுடன் சந்தேக நபரை இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X