2025 மே 05, திங்கட்கிழமை

நேபாள மாநகர சபை பிரதிநிதிகள் மட்டு. விஜயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


நேபாளத்திலுள்ள மாநகர சபைகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், கணக்காளர் திருமதி ஜீ.எச். சிவராஜா, பொறியியலாளர் பி.அச்சுதன், நிருவாக அதிகாரி செல்வி நிசாந்தினி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாநகர சபையின் அபிவிருத்திச் செயற்பாகள், மக்களுடன் உள்ளுராட்சி சபைகள் இணைந்து செயற்படுகின்றமை, மக்களது தேவைகளை நிறைவேற்றப்படுகின்றமை, குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு வந்த நேபாள பிரதிநிதிகள், களுத்துறை மற்றும் கொழும்பு மாநகர சபைகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X