2025 மே 05, திங்கட்கிழமை

கட்டாரில் விபத்திற்குள்ளான ஆறுமுகத்தான் குடியிருப்பாளருக்கு புதிய வீடு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சஹன வீடமைப்பு திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பில் வீடு ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.

ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் கட்டார் நாட்டில் விபத்துக்குள்ளாகி சுகவீனமடைந்த நிலையில் நாடு திரும்பியிருந்தார். இவருக்காக இந்த வீடு அமைக்கப்படவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 500,000 ரூபா நிதியுதவியுடனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப ஆலோசனையுடனும் இந்த வீடு அமைக்கப்படவுள்ளது.

இந்த வீடு அமைப்பதற்கான காசோலையை வீட்டு உரிமையாளரிடம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி முகாமையாளர் எஸ்.அநுரகுமார வழங்கினார்.

இந்த நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி முகாமையாளர் எஸ்.அநுரகுமார, அதன் நிறைவேற்று உத்தியோகத்தர் தனுக சமரகொடி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலக பொறப்பதிகாரி எம்.நிருத்பவா,  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி முகாமையாளர் ஜே.டி.நிமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X