2025 மே 05, திங்கட்கிழமை

சிறுவர் உரிமைகள் தொடர்பான நான்கு நாள் பயிற்சி பட்டறை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனத்தின் உதவியுடன் தலைமைத்துவம், சிறுவர் உரிமைகள், கடமைகள் பொறுப்புக்கள் போன்ற தலைப்புக்களில் நடைபெற்ற நான்கு நாள் பயிற்சியானது இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

கன்னங்குடா மகாவித்தியாலயம், கரடியனாறு மகாவித்தியாலயம்,  இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டனர். 

நான்கு நாட்கள் வதிவிடப் பயிறசியாக இப்பயிற்சி இடம்பெற்றது.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.யின் பொதுச் செயலாளர் கலாநிதி டி.டி.டேவிட், நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் எஸ்.பற்றிக், சேவ் த சில்ரன் நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்களான எஸ்.திருக்குமரன், திவ்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பயிற்சியின் வளவாளர்களாக எஸ்.ஸ்ரீதரன்,  ஏ.ஜெய்கரன், ஆகியோருடன் அனிட்டா, கிறிஷhந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X