2025 மே 05, திங்கட்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை கட்டிடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை சமூக பொலிஸ் பொறுப்பதிகாரி யூ.எல்.இமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.மேவன் சில்வா கலந்து கொண்டார். அதிதிகளாக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்னஇ வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீரஇ ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள வாழைச்சேனை பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச செயலகம், கிரான் பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஆகிய 4 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 38 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X