2025 மே 05, திங்கட்கிழமை

தலைமைத்துவம் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தலைமைத்துவம் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று திங்கட்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேறிய மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உதவுதல் எனும் திட்டத்தின் கீழ் இந்தச் செயலமர்வு நடத்தப்பட்டது.

இந்தச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 90 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

3 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தச் செயலமர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் 4  நாட்கள் நடத்தப்பட்டன.

இதில் சிறுவர் உரிமை,  தலைமைத்துவம், ஒழுக்கம், பண்பாடு, கல்வியின் முக்கியத்துவம், சிறுவர் துஷ்பிரயோகம், யோகாசனம், ஆன்மீகம், கலை, கலாசாரம் உள்ளிட்ட  தலைப்புக்களில் விரிவுரைகளும் குழுச் செயற்பாடுகளும் ஆக்கத்திறன் செயற்பாடுகளும் நடைபெற்றன.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகம் இணைந்து சேவ்த சில்ரன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தச் செயலமர்வை நடத்தியது.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் (வை.எம்.சி.ஏ) மண்டபத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், உதவி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிநேசன், சேவ்த சில்ரன் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் கே.திருக்குமரன், அதன் திட்ட உத்தியோகத்தர் ஆர்.வித்யா, மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் (வை.எம்.சி.ஏ) திட்ட இணைப்பாளர் கே.எஸ்.பற்றிக், அதன் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X