2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு.மாநகரை அபிவிருத்தி செய்ய கொரியா உதவி

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


கொரிய நாட்டு உதவி மற்றும் திட்டமிடலுடன் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியுமென கொரிய அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் பேராசிரியர் ஜின்சியோல் ஜோ தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த கொரிய தூதுக்குவிற்கு தலைமை வகித்த அவர் மாநகர ஆணையாளருடனான சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் மற்றும் ஆசிய பவுண்டேசன் நிறுவன உயர் அதிகாரிகள் உட்பட பலர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த கொரிய நிறுவன பணிப்பாளர் நகர திட்டமிடல் மிகவும் முக்கியமானது.கொரியாவில் பௌதீக திட்டமிடலினூடாகவே அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரியாவில் எமது அனுபவத்தை வைத்து இலங்கையிலும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X