2025 மே 05, திங்கட்கிழமை

வட, கிழக்கு மாகாண மீனவர்களுக்கு முன் கடன் திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கு முதன்முறையாக முன் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிமனையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு,  அம்பாறை, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவர் அமைப்புக்களிலிருந்து தெரிவான 60 மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X