2025 மே 05, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரில் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான தொழிலாளி ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி நகரில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  தச்சு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார்.

இதனைத் தொடர்ந்து இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தன் கூழாவடியைச் சேர்ந்த எஸ்.ஏ.சசி (வயது 40) என்பவரே மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X