2025 மே 05, திங்கட்கிழமை

ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்துகொண்ட மாணவிக்கு வரவேற்பு

Super User   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


25ஆவது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்துகொண்ட மாணவிக்கு இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பாரிய வரவேற்பளிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கூடிய புள்ளிகளைப் பெற்ற 6 மாணவர்கள் இலங்கை சார்பாக  ஜப்பான் புக்கோக்கா நகரில் நடைபெற்ற 25 ஆவது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த ஆறு மாணவர்களில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையைச் சேர்ந்த முகம்மட் லாபீர் பாத்திமா நிபாசாத் என்ற மாணவியும் ஒருவராவார். இதனாலேயே இவருக்கு இந்த வரவேற்பு வழங்கப்பட்டது.

இவருடன் இப்பாடசாலையில்  5ஆம் ஆண்டு  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய 37 மாணவர்களும் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X