2025 மே 05, திங்கட்கிழமை

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் மட்டு. விஜயம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களை மட்டக்களப்பு விமான நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின்; அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும்  தேவைப்பாடுகள் தொடர்பிலும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.

இதன்போது, நினைவுச்சின்னமொன்றை அபிவிருத்திப் பங்களிப்பு நிர்வாகத்துக்கான விசேட செயலாளர் பி.எஸ்.ராகவனிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கையளித்தார்.

மேலும், றூகம் கிராமத்திற்கு சென்ற இந்தக் குழுவினர் அந்தப் பகுதி மக்களைச்  சந்தித்து கலந்துரையாடினர்.

அபிவிருத்தி பங்களிப்பு நிர்வாகத்துக்கான விசேட செயலாளர் பி.எஸ்.ராகவன், மேலதிக செயலாளரும் நிதி ஆலோசகருமான ஏ.ஆர்.சிங்கா, மேலதிக செயலாளர் திருமதி சுஜாதா மேத்தா, கட்டடக்கலை நிபுணர் கீர்த்தி சிங்கா, நிதிப்பணிப்பாளர் அனுர சிறிவஸ்தவா ஆகியோர் இந்த விஜயத்தில் உள்ளடங்கியிருந்தனனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X