2025 மே 05, திங்கட்கிழமை

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைத்துக்கொள்வதற்குரிய செயலமர்வொன்று  காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைப்பதற்கு சமூக மட்டத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர், உதவிப் பிரதேச செயலாளர் அப்கர் அஹமட், சம்மேளன உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர் ஸல்மா அமீர் ஹம்சா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.யூ.றஸ்மினா பேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X