2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு. மாவட்ட கராத்தே சங்கம் அங்குரார்ப்பணம்

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜௌபர் கான், எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.எம். நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்ட கராத்தே சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு  இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சி. சந்திரகாந்தன், மாவட்ட அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ், மட்டு. மாநகர ஆணையாளர் கே. சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கராத்தே வீரர்களுக்கான நியமனக் கடிதம், அடையாள அட்டை மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மொறட்டுவை சர்வதேச கராட்டி சங்க பிரதம விரிவுரையாளர் பி. சத்திரசிங்க,மட்டக்களப்பு மாவட்ட கராத்தே பயிற்சியாளர் எஸ். பிரகாஸ் ஆகியோர் மாகாண சபை உறுப்பினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X