2025 மே 05, திங்கட்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

9 வயதுச் சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 68 வயதான முதியவர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர்முனை பகுதியிலேயே நேற்று புதன்கிழமை மாலை இந்த வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அயல் வீட்டிலிருந்த சிறுமியையே இந்த முதியவர் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X